இரண்டு சிறுவர்கள் உட்பட மேலும் 6 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இரண்டு சிறுவர்கள் அடங்கலாக மேலும் 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களை மீட்க இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமாக ஹோவர்கிராப்ட் கப்பல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.

இரண்டு சிறுவர்கள் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்துள்ள மணல் திட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த 41 வயதுடைய
பாலசுகந்தன், 35 வயதுடைய அனுஜா 10 வயதுடைய பிரசன்னா, 08 வயதுடைய மேனலக்சன் எனும் ஒரு குடும்பமும்,

38 லவதுடைய லிங்கேஸ்வரன், 40 வயதுடைய பிரதாம்பிகை எனும் மற்றுமொரு குடும்பமும் இதில் அடங்குகிறது.

10ம் திகதியான நேற்று இரவு 08 மணிக்கு இலங்கை தலைமன்னாரில் இருந்து, இலங்கை பைப்பர் படகில் இவர்கள் தமிழகம் சென்றுள்ளதாகவும், அதற்காக இலங்கை ரூபாவில் நான்கு லட்சம் கொடுத்துள்ளதாகவும் அவர்கள் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள 1-ம் தீட்டை பகுதியில் 11ம் திகதியான இன்று காலை 07.00 மணிக்கு சென்றடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Follow on social media
CALL NOW

Leave a Reply