தவறான உறவில் கர்ப்பம் – யூடியூப் உதவியுடன் குழந்தை பெற்ற 15 வயது சிறுமி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் 15 வயது சிறுமி, யூடியூப் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம் செய்து, பிறந்த குழந்தையை உடனடியாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர், தவறான உறவில் இருந்து பெண் குழந்தையை கருத்தரித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பாடசாலை செல்லும் இந்த சிறுமியின் தாய் வீடுகளில் பணிப்பெண்ணாக பணியாற்றி, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சிறுமிக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை. அவர் தனது தாயின் கைபேசியில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது வழக்கம்.

சிறுமிக்கு கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நபர் சிறுமியை காதலிப்பதாக கூறி, நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார். சிறுமி பயத்தாலும் குற்ற உணர்ச்சியாலும் இதை தன் தாயிடம் செயல்லாமல் மறைத்து வந்துள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, சிறுமி தனது தாயாரிடம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி பல மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளார். மாதங்கள் ஓடின.

கடந்த மார்ச் 2 ஆம் திகதி, தாய் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரிடம் கைபேசியும் இருந்தது. அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், யூடியூப்பில் வீடியோக்களைப் பார்த்தார், அதன் உதவியுடன் அவர் வீட்டில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

சிறுமி சொந்தமாக இதைச் செய்ததாக நம்பப்பட்டாலும், வேறு நபரின் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். புதிதாகப் பிறந்த குழந்தையை சிறிது நேரம் தொட்டியில் வைத்திருந்த பின், தனது தவறான உறவையும் கர்ப்பத்தையும் என்றென்றும் ரகசியமாக வைத்திருக்க குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தார். பீதியில், பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றார்.

பின்னர் பிறந்த குழந்தையின் உயிரற்ற உடலை சிறிது நேரம் தொட்டியில் வைத்திருந்தார். அவள் இரத்தக் கறைகளை தரையில் சுத்தம் செய்ய முயன்றாள். இரவு 9 மணியளவில் அவரது தாயார் திரும்பி வந்தபோது, ​​​​ரத்தக் கறைகளை அவதானித்து, சிறுமியிடம் அது குறித்து விசாரித்தார். பிரசவம் ஆனதையும், தொட்டியில் பிறந்த குழந்தையின் சடலத்தையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அவர் உடனடியாக தனது மகளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார், அங்கு வைத்தியர்கள் இது குறித்து அம்பாசாரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, சிறுமிக்கு மதுவை வழங்கிய பின்னர் அவரது இன்ஸ்டாகிராம் காதலனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.

இன்ஸ்டாகிராம் காதலனை தாக்கூர் என்று மற்றும் அடையாளம் சொல்லும் சிறுமி, அவரது முழு பெயர் மற்றும் முகவரி என எதுவும் தெரியவில்லை.

இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியை கர்பமாக்கி ஏமாற்றிய நபரை அடையாளம் காண சிறுமியின் இன்ஸ்டாகிராம் கணக்கை பொலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply