பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் இன்று

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் முற்பகல் 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தின் எதிர்வரும் வாரத்திற்கான நிகழ்ச்சி நிரல் தொடர்பில் தீர்மானிக்கும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply