யாழில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து விட்டு தப்பி சென்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்திற்கும் அதிகமானவர்களை கொண்ட வன்முறை கும்பல் , வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் , சைக்கிள்கள் என்பவற்றை சேதப்படுத்தியதுடன் , ஜன்னல் கண்ணாடிகள் , மீன் தொட்டி , தையல் இயந்திரம் என்பவற்றையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting