யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்துள்ள இலங்கைக்கான அமெரிக்க துாதுவர் ஜீலி சுங் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் முக்கியஸ்த்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்று மாலை 6.30 மணியளவில் கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா,
புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Follow on social media